×

தஞ்சாவூரில் வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை

 

தஞ்சாவூர், ஜூலை 17: தஞ்சாவூர் நாலுகால் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் திரிபுரசுந்தரி (58). கணவனை இழந்த இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் இருந்த 1 பவுன் செயின், வெள்ளி பாத்திரங்கள், வெள்ளி விளக்கு உள்பட ரூ.95 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் தஞ்சாவூர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post தஞ்சாவூரில் வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Tripurasundari ,Nanlukal Mandapam ,
× RELATED தஞ்சாவூர் மருத்துவமனை வளாகத்தில்...